நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்……
………………………………………………
ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன…
உன்னோடு நான் பேசுகையில்…. Read the rest of this entry »
நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்……
………………………………………………
ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன…
உன்னோடு நான் பேசுகையில்…. Read the rest of this entry »

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்
எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்
உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே
உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா

இந்த குளிர் காற்றினில் சிக்கிக் கொண்டு
நடுங்குது என் உள்ளம்…
என்னவள் மட்டும் என் அருகே வந்து
கட்டி அனைத்து இமைகளை மூடி
என் இதழ்களை கொஞ்சம் கடித்து கொஞ்சம் சுவைத்து
உள்ளுக்குள் சிரித்து
வெட்கத்தோடு ஒரு முத்தம் தந்தால்
இந்த குளிர் காற்று கூட
தலை சுற்றி வியர்ந்து போய்
அவள் முத்தங்களுக்கு பணிந்து போய் விடும்…
ஏன் தெரியுமா?
கல்லாக இருந்த என் மனத்தை கூட
கரைத்த அந்த முத்தங்களுக்கு முன்
இந்த குளிர் காற்று நிலைத்து நிற்குமா???

அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது
முகம் புதைத்து
வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……
சொர்க்கத்தை……
இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?
உன்னாலே உயிர் பெற்றேன்
உன்னாலே உணர்வுகளை
சுவாசிக்கின்றேன்
உனை பிரிவதனிலும்
பிரிவது என் உயிராயிருக்க
ஆசைப்படுகின்றேன்
அன்பனே
அன்பானவனே
அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!
என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!
உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம்
சின்னாபின்னம்தான்
உயிர்ப்பதாயினும்
உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்
என்னவனே எனக்குள்ளேயே
தொலைந்துவிடு
என் இறுதிவரை!

ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!
**********
காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்
**********
உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்
**********
காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்

எத்தனையோ
பொய்கள் சொல்லியிருக்கிறேன்
உன்னிடத்தில்…
பொய்யென்றே தெரிந்தும்
ஏற்றுக் கொண்டிருக்கிறாய்
அனைத்தையும்!
‘என்னை மறற்திடுங்க’ என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.
காதலின் வலிமையை
காலங்கள் உணர்த்துமென
காத்திருந்தேன்.
ஜாதியின் வலிமையை
உணர்த்தியது
உன் திருமணம்